Thu. Apr 25th, 2024

நேற்று யாழ் மாவட்ட த்தில் 144 பேருக்கு தொற்று

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வெளியான முடிவுகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் அன்ரியன் பரிசோதனையில் 122 பேருக்கும்,  பிசிஆர் பரிசோதனையில் 22 பேருக்கும் என யாழ் மாவட்டத்தில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அன்ரியன் பரிசோதனையில் யாழ்ப்பாணம் சுகாதார பிரிவில் 20 பேருக்கும்,  சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் 16 பேருக்கும்,  பருத்தித்துறை சுகாதார பிரிவில் 15 பேருக்கும்,  ஊர்காவற்துறை சுகாதார பிரிவில் ஒருவருக்கும்,  நல்லூர் சுகாதார பிரிவில் 20 பேருக்கும்,  சாவகச்சேரி சுகாதார பிரிவில் 27 பேருக்கும்,  காரைநகர் சுகாதார பிரிவில் 11 பேருக்கும்,  வேலணை சுகாதார பிரிவில் 4 பேருக்கும்,  கோப்பாய் சுகாதார பிரிவில் 8 பேருக்கும் என 122 பேருக்கும், பிசிஆர் பரிசோதனையில் யாழ்ப்பாணம் சுகாதார பிரிவில் 7 பேருக்கும்,  சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒருவருக்கும்,  கோப்பாய் சுகாதார பிரிவில் 3 பேருக்கும்,  பருத்தித்துறை வைத்தியசாலையில் இருவருக்கும்,  நொதேண் வைத்தியசாலையில் ஒருவருக்கும்,  தெல்லிப்பளை சுகாதார பிரிவில் 8 பேருக்கும் என யாழ் மாவட்டத்தில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்