Fri. Apr 26th, 2024

நெல்லியடி வங்கி முகாமையாளருக்கு தொற்று

தேசிய சேமிப்பு வங்கியின் நெல்லியடிக் கிளை முகாமையாளர் மற்றும் நெல்லியடி food cityயில் பணிபுரியும் ஊழியர் போன்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முகாமையாளருக்கு தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து யாழ் வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து வங்கி ஊழியர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் நெல்லியடி Food Cityயில் பணிபுரியும் ஒருவருக்கு தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்