நெல்லியடி மத்திய கல்லூரி கல்விச் செயல்பாடுகள் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகும் – அதிபர் கிருஸ்ணகுமார்
யா/நெல்லியடி மத்திய கல்லூரியின் கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகும் என நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
நெல்லியடி மத்திய கல்லூரியில் தற்போது க.பொ.த.சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணி நடைபெற்று வருகிறது. மதிப்பீட்டு பணி நாளை மறுதினம் திங்கட்கிழமை வரை நீடிக்கப்பட்டிருப்பதனால் செவ்வாய்க்கிழமையை தரம் 8 முதல் தரம் 11 ஆரம்பமாகவுள்ளது. தற்போது நடைபெற்று வரும் தரம் 6, தரம் 7 மற்றும் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்கள் வழமைபோல் தொடர்ந்தும் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.