Thu. Apr 25th, 2024

நெல்லியடி பொது மலசல கூடத்தை திறக்கவும்- மக்கள் வேண்டுகோள்

நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பொது மலசல கூடத்தை துப்புரவு செய்து மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பொது மக்கள் மலசல கூடம் அவர்களின் பாவனைக்கு வழங்கப்படமால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல்லியடி பொலீஸ் பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர அவர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட போது,

நெல்லியடி பஸ் தரிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும்  பொது மலசல கூடம், பஸ்தரிப்பு நிலையம் புனரமைக்கப்பட்ட போது இலங்கை போக்குவரத்து சபையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து சபை நடவடிக்கை எடுப்பதற்கு தாம் ஆலோசனை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பொது மலசல கூடம் மக்கள் பாவனைக்கு சில மாதங்கள் விடப்பட்ட போதிலும் போதிய நீர் வசதியின்மை மற்றும் துப்புரவு இன்மை காரணமாக மூடப்பட்டுள்ளது. நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்தில் பயணிகள் பல இடங்களில் இருந்தும் நள்ளிரவு நேரங்களிலும் பேரூந்தில் இறங்குவதனால் மலசல கூடத்தை பராமரிப்பதற்கு கட்டணத்தை பெற்றுக் கொண்டாவது திறக்குமாறு பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்