நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் முடிந்துள்ளது.
நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கும் செயற்பாடு நிறைவடைந்துள்ளது.
நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் எரிபொருள் வழங்கப்பட்டது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் வழங்கப்பட்ட எரிபொருளுக்கு மேலதிகமாக மக்கள் பலர் காத்திருந்தனர். இதனால் முதலில் மோட்டார் சைக்கிள்களுக்கு 2000/= என வழங்கப்பட்ட எரிபொருள் பின்னர் மக்கள் பலருக்கு வழங்கும் நோக்கத்தில் குறைவாக வழங்கப்பட்டது.
இருப்பினும் காத்திருந்த மக்களுக்கு முழுமையாக வழங்க முடியவில்லை. இதனால் காத்திருந்த மக்கள் சிலர் குழப்பம் விளைவிக்க முற்பட்ட போதிலும் பொலீஸாரால் அச்சுறுத்தப்பட்டனர். அதன் பின்னர் பொதுமக்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.