Fri. Apr 19th, 2024

நெல்லியடியில் விபத்து ஒருவர் பலி இருவர் வைத்தியசாலையில்

நெல்லியடி பகுதியில் இரு வேறுபட்ட விபத்தில் தனியார் பேருந்து நேரங்கணிப்பாளர் பலியாகியதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் கரவெட்டி வடக்கு மாணிக்கம் நாகராசா (வயது 63) என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில்  நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகில் கொடிகாமம் வீதியூடாக சிக்னல் லைற்றூடாக பருத்தித்துறை யாழ் வீதியில் மோட்டார் சையிக்கிளை திருப்பி உள்ளார்.  அப்போது யாழ் பருத்தித்துறை  பிரதான வீதியூடாக மோட்டார் சையிக்கிளில் பயணித்த ஒருவர் தேநீர் கடைக்கு திரும்பியுள்ளார். இரு மோட்டார் சையிக்கிளும் விபத்திற்குள்ளாகிய நிலையில், தனியார் பேருந்து நேரம் கணிப்பாளர் பதிவை மேற்கொண்டிருந்த போது விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் நேரங் கணிப்பாளர் தலையில் பலத்த காயமேற்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சையிக்கிளில் பயணித்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றைய மோட்டார் சையிக்கிள் ஓட்டுனரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் நெல்லியடி எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக உள்ள பாதசாரிகள் கடவையூடாக ஒருவர் கடக்க முற்பட்ட போது மோட்டார் சையிக்கிளில் பயணித்த பெண் ஒருவர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பத்திரிகை விற்பனை நிலையத்தில் மோதியது.இதில் மோட்டார் சையிக்கிள் பெண் சாரதி காயமடைந்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்