Wed. Apr 17th, 2024

நெல்லியடியில் முதியவரின் பையை இழுத்த திருடன்

வயது முதிர்ந்தவர்களின் பையை திருட முற்பட்ட போது அவர்களின் கூக்குரலால் திருடன் தப்பித்து ஓடிய சம்பவம் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியில் நியூ எக்சலண்ட் தனியார் கல்வி நிலையத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை  இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
வயது முதர்ந்த கணவன் மனைவி இருவரும் பேரூந்தில் இருந்து இறங்கி நடந்து சென்ற போது குறித்த வீதியால் துவிச்சக்கர வண்டியில் வந்த இளைஞர் ஒருவர் வயது முதர்ந்த பெண் கையில் வைத்திருந்த பையை இழுத்துள்ளார். இதனை கண்ட கணவன் கல்லை எடுத்து திருடனை தாக்கி சத்தமிட்டுள்ளார். தனியார் கல்வி நிலையத்தில் கற்பித்த ஆசிரியர்கள் வெளியில் ஓடி வந்த போது திருடன் ஓடி மறைந்துள்ளார். முதியவர் குறிப்படுகையில் தனது கையில் நான் உடுத்த சாறிகளே உள்ளன. இது தெரியாமல் திருடன் பறிக்க முற்பட்டதாக கூறினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்