Wed. Apr 24th, 2024

நெல்லியடியில் நெஞ்சுவலியால் குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார்

நெஞ்சுவலியால் இன்று  திடீரென குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லியடி மகாத்மா வீதி ஐயனார் கோயிலடியைச் சேர்ந்த 60 வயதுடைய நா.விக்னேஸ்வரன் (அப்புக்கிளி)  என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் முகாமாலையில் தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்த போது அதிகாலை 4.30 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. அதன் பின்னர் சுடுநீர் குடித்த பின்னர் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்