நெடுந்தீவு படகுச் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
நெடுந்தீவு படகுச் சேவை கடல்கொந்தளிப்பு காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் அறிவித்துள்ளார்.
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக கடல் மார்க்கமாக நீண்ட தூர பயணம் பாதுகாப்பற்றதாக காணப்படுகிறது. இதனால் குறித்த படகுச்சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பாக படகுகளும் அப்புறப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.