Fri. Apr 26th, 2024

நாளையும் அதிபர் ஆசிரியர்கள் சங்கப் போராட்டம் தொடரும்- ஜோசப் ஸ்டாலின்

நாளை வியாழக்கிழமையும் அதிபர்,  ஆசிரியர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் தமது தொழிற்சங்கப் போராட்டம் தொடர்வதுடன் நாளைய தினம் நடைபெறுகின்ற கலந்துரையாடலிலேயே  தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்க போராட்டத்தில் இருந்து சில தொழிற்சங்கங்கள் விலகியுள்ளன. இதனால் தொழிற்சங்கங்களுடனான சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது. அத்துடன் நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டால் அதன் பின்னரே போக்குவரத்துக்கள் இடம்பெறும். இந்நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்வதென்பது சாத்தியமற்றதாகும். இது தொடர்பாக கல்வி அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி நிலை பாதிப்படைவதை நாம் அறிவோம். இழந்த கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதற்கு ஆசிரியர்களால் முடியும். இருப்பினும் எமது தொழிற்சங்க போராட்டம் குறிக்கோள் இல்லாமல் முடிவடையக் கூடாது. எனவே அதிபர் ஆசிரியர்கள் தேவையற்ற பயமோ அல்லது ஒற்றுமையின்மையையோ வெளிப்படுத்த வேண்டாம். எமது போராட்டம் தொடர்பாக நாளைய தினம் அறிவிப்போம். எனவே எமது போராட்டம் தற்சமயம் நாளைவரை தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்