Sat. Apr 20th, 2024

தேசிய மட்ட கயிறிழுத்தல் யாழ் மாவட்டம் வெள்ளிப் பதக்கம்

தேசிய மட்ட கயிறுத்தல் போட்டியில் யாழ் மாவட்ட இளைஞர் பெண்கள்  அணி வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டனர்.
மாவட்ட இளைஞர் அணிகளுக்கிடையிலான
33வது தேசிய மட்ட போட்டியின் ஓர் அங்கமான பெண்களுக்கான கயிறுத்தல் போட்டிகள் நேற்று செவ்வாய்க்கிழமை சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் யாழ் மாவட்ட இளைஞர் அணியை எதிர்த்து இரத்தினபுரி மாவட்ட இளைஞர் அணி மோதியது. இதில் யாழ் மாவட்ட இளைஞர் அணி 1:2 என்ற செற் கணக்கில் தேல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டனர். யாழ் மாவட்ட பெண்கள் இளைஞர் அணி 2017,2018ம் ஆண்டுகளில் வெண்கலப் பதக்கத்தையும், 2019ம் ஆண்டு சம்பியன் பட்டத்தையும், இவ்வாண்டு வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்