Thu. Mar 28th, 2024

திட்டமிட்டபடி பரீட்சைகள் நடைபெறும் – கபில பெரேரா

பரீட்சைகள் எவையும் ஒத்திவைக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெராரா தெரிவித்துள்ளார்.

க.பொ.த.உயர்தரம், க.பொ.த.சாதாரணம் மற்றும் தரம் 5 புலமைப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பரீட்சைகள் கடந்த வருடம் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை கருத்தில் கொண்டு பிற்போடப்பட்டது. ஆனால் பரீட்சைகள் தாமதமடைவதால் பெரும்பாலான மாணவர்கள் பாதிப்படைகின்றனர். எனவே திட்டமிட்டபடி எதிர்வரும் 22ம் திகதி தரம் 5 புலமைப் பரீட்சையும், உயர்தர பரீட்சை அடுத்த மாதம் 7ம் திகதியும் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்