தாவடி வீட்டில் யன்னல்கள் உடைப்பு
மோட்டார் சைக்கிளில் சென்றவர்களால் வீட்டின் யன்னல் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் இன்று கொக்குவில் தாவடிப் பகுதியில் உள்ள வீடொன்றில் நடைபெற்றுள்ளது.
இன்று குறித்த வீட்டின் உரிமையாளர் மரணச் சடங்கில் கலந்து கொண்டுள்ளார்.
அங்கு இரு குழுவினருக்கிடேயே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த சமயம் குறித்த வீட்டின் உரிமையாளர் நடுநிலைமை வழங்கி வைத்துள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பிய போது 3 மோட்டார் சையிக்கிளில் வந்தவர்கள் கண்ணாடிகளை சேதமாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.