Sat. Apr 20th, 2024

தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 60 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு சற்று முன்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் குறித்த இடத்தில் நடைபெற்றது.

அடிக்கற்களை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் வைச்திய அத்தியட்சகர் வே.கமலநாதன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.வானதி ஜெயதாஸ், தாதிய பரிபாலகி திருமதி.குமுதமலர் ரவீந்திரன் மற்றும் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் போன்றோரால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பிரதமகுரு சி.இராஜேந்திரராஜா குருக்களினால் பூசை வழிபாடுகள் செய்யப்பட்டது.
PSDG திட்டத்தில் இவ்வருடம் முதற் கட்டமாக 32 மில்லியன் ரூபாவும் அடுத்தாண்டு 28 மில்லியன் ரூபாவுமாக 60 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக் கட்டிடத்தை பிரதான கட்டுமானப்பணி IDIEAL இஞ்சினியர் பிறைவேற்ட் லிமிற்ரட்டினால் கட்டுமான பணிகள் செய்யப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக நிரந்தரமான தாதியர் விடுதிக்கான கட்டிடம் இல்லாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்