தமிழ் மொழித்தின போட்டித் திகதிகள் அறிவிப்பு
அகில இலங்கைத் தமிழ்மொழித் தினப் போட்டிகள் நடைபெறும் திகதிகள் தொடர்பாக வடமாகாண கல்வித் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பாடசாலை மட்டப் போட்டிகள் 04ம் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னரும், வலய மட்டப் போட்டிகள் 07ம் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னரும், மாகாண மட்டப் போட்டிகள் 09மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னரும், தேசிய மட்டப் போட்டிகள் யாவும் 2023.11.18,19 மற்றும் 2023.11.25,26 ஆகிய திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.
கல்வியமைச்சின் சுற்றறிக்கை இலக்கம் 35/2018 இற்கு அமைவாக அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டிகள், கல்வியமைச்சின் தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் கிளையின் தமிழ்மொழி அலகினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்றது. ஆயினும் 2023 ஆண்டு தரம் 10 இற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு மாத்திரம் போட்டிகள் நடாத்தப்பட்டன. எனினும் 2023ஆம் ஆண்டு தொடக்கம் மீளவும் சகல போட்டிகளையும், தரம் 04 தொடக்கம் தரம் 13 வரையிலான சகல வகுப்புகளுக்கும் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது