தண்டவாளத்தில் 10 மாடுகள் பலி
பரீட்சாத்தமாக மேற்கொள்ளப்பட்ட புகையிரத தண்டவாளத்தில் 10 மாடுகள் சிக்குண்டு இறந்துள்ளது.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை தென்மராட்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கூட்டமாக குறித்த தண்டவாளத்தில் பயணித்த போது யாழ்ப்பாணம் நோக்கி தமது பரீட்சார்த்த சேவையில் ஈடுபட்டுள்ள புகையிரதத்தில் சிக்குண்டே 10 மாடுகள் பலியாகியுள்ளன.