Fri. Mar 29th, 2024

சையிக்கிளில் சென்ற ஆசிரியைக்கு நேர்ந்தகதி

பாடசாலைக்கு சையிக்கிளில் சென்ற ஆசிரியை மயங்கி விழுந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வடமராட்சி கரவெட்டி கோட்ட பாடசாலை ஒன்றிலேயே நேற்று இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த ஆசிரியை வழமையாக மோட்டார் சைக்கிளில் சென்று வந்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனது வீட்டில் இருந்து சைக்கிளில் சென்றுள்ளார்.
குறித்த ஆசிரியை பாடசாலையை சென்றடைந்ததும் மயங்கி வீழ்ந்துள்ளார். சக ஆசிரியர்களால் முதலுதவி வழங்கப்பட்டு அவரை பழைய நிலைக்கு திருப்பியுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்