Tue. Apr 23rd, 2024

சென்னையில் இருந்து பலாலி வந்திறங்கிய பயணிகள் விமானம்

இந்தியாவின் சென்னைக்கும் யாழ்ப்பாணம் பலாலிக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன் சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் பலாலியில் இன்று தரையிறங்கியுள்ளது.

திங்கள், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கும் விமான சேவைகள் நடத்தப்பட உள்ளன.

அலயன்ஸ் எயார் விமான சேவை நிறுவனம் சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்திற்கும் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையிலான இந்த விமான சேவைகளை நடைபெறுகிறது
இதற்கு முன்னர் சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமான சேவைகள் நடத்தப்பட்டதுடன் கொரோனா தொற்று பரவலை அடுத்து அந்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

 

 

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்