Fri. Apr 19th, 2024

சுருட்டை புகைத்த மூதாட்டி தீ பரவியதில் மரணம்

சுருட்டை புகைப்பதற்க்காக தீமூட்டிய வயோதிப மாது தீயில் எரிந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த  சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வல்வெட்டித்துறை திரைவளவை  சேர்ந்த பவளம் கிருஷ்ணசாமி (வயது 83) எனும் மூதாட்டியை இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
சுருட்டு  புகைக்கும் பழக்கமுடைய மூதாட்டி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04)   தீக்குச்சியை எடுத்து சுருட்டை பற்றவைக்க தீமூட்டிவிட்டு அதனை அணைக்காது எறிந்துள்ள நிலையில் அவரது ஆடைகளில் தீபரவல் ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்த உறவுகள் உடனடியாக  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஆனுமதிக்கப்பட்ட நிலையில் மூதாட்டி நேற்று பிற்பகல் மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்த குறித்த  மூதாட்டி தொடர்பான விசாரணைகளை சதானந்தம் சிவராசா மேற்கொண்டு வருகின்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்