சீனாவின் தொழில் நுட்பத்தை நாம் பெற வேண்டும். அமைச்சர் தெரிவிப்பு
நாட்டை வேறு நாடுகளுக்கு விற்கவோ அல்லது அயல் நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படவோ நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல்களின் இறுதியில் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பூநகரி கெளதாரி முனையில் அட்டை பண்ணை அனுமதியை சீனா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் சீன நிறுவனத்தின் முதலீடுகளையும் தொழில் நுட்பத்தினையும் பெற்று எமது மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நாட்டை விற்கவோ அல்லது அயல் நாடான இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவோ நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை சீனாவின் தொழில்நுட்ப அறிவையும் பெற்று போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.