சர்வதேச உதைபந்தாட்டத்தில் பியுலஸ் ஆட்ட நாயகனாக தெரிவு
சர்வதேச உதைபந்தாட்ட போட்டியில் (SAFF) பியுஸ்லஸ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
SAFF CHAMPIONSHIP -2021 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று மாலைதீவில் இடம்பெற்றது. மூன்றாவது லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து இந்தியா மோதியது.
இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இதனால் இரு அணிகளால் ஆட்ட நேரம் முடியும் வரை கோல் எதனையும் போட முடியாமல் சமநிலையில் ஆட்டம் நிறைவடைந்தது.
இப்போட்டியில் கருணாகரன் கருணாகரன் உதைபந்தாட்ட அக்கடமியின் பயிற்றுவிப்பாளர் டக்சன் ஜ பியுஸ்லஸ் அவர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தின் மூலம் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டு சர்வதேச ரீதியில் தமது திறமையினை வெளிப்படுத்தியமை மாத்திரமின்றி, இலங்கைக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமையினை தேடித்தந்துள்ளார்.