Tue. Apr 16th, 2024

சமூக ஊடகங்களில் தான் கூறியதாக வைரலாகி வரும் செய்தியை பேராசிரியர் டாக்டர் தாசுகு ஹொன்ஜோ வன்மையாக மறுப்பு

சமூக ஊடகங்களில் தான் கூறியதாக வைரலாகி வரும் செய்தியை பேராசிரியர் டாக்டர் தாசுகு ஹொன்ஜோ வன்மையாக மறுப்பு
புகழ் பெற்ற ஜப்பானிய பேராசிரியரும் 2018 ஆம் ஆண்டு நோபல் பரிசு வென்றவருமான பேராசிரியர் டாக்டர் தாசுகு ஹொன்ஜோ தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் செய்தியை மறுத்துள்ள அவர் இதனை வன்மையாக கண்டித்துள்ளார்.
கோரோனோ வைரஸ் இயற்கையான ஒன்று அல்ல என்றும் அது சீனாவில் ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்டது என்றும் பேராசிரியர் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று வைரலாகி வருவது குறித்து மறுப்பறிக்கை வெளியிடும் பொழுதே இதனை அவர் தெரிவித்தார்.
தவறான பொய் செய்திகளுக்காக சக்தியை பயன்படுத்துவதை காட்டிலும் , தற்பொழுது உள்ள கோரோனோ வைரஸ் எதிர்க்க அந்த சக்தியை பயன்படுத்துமாறும் அவர் கோரிக்கையே விடுத்தார் .
இது தொடர்பாக அவர் பேராசிரியராகவுள்ள க்யோட்டோ பல்கலைக்கழகமும் மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

சமூக வலைத்தளங்களில் உலாவரும் செய்தி……

நோபல் பரிசு பெற்ற ஜப்பானின் உடலியல் மற்றும் மருத்துவதுறை பேராசிரியர் பேராசிரியர் டாக்டர் தாசுகு ஹொன்ஜோ, தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல என்று கூறி இன்று ஊடகங்கள் முன் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த வைரஸ் இயற்கையானது என்றால், இது போன்ற முழு உலகையும் மோசமாக பாதிக்காது.
இயற்கை விதியின் படி, உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நாடுகளின் வெப்பநிலை அந்தந்த பகுதிக்கு ஏற்ப மாறுபடும்.
கரோனா வைரஸ் இயற்கையானது என்றால், அது சீனாவின் வெப்பநிலையை கொண்டுள்ள நாடுகளை மட்டுமே பாதிக்கும்.
ஆனால் அதற்கு பதிலாக,
இது சுவிட்சர்லாந்து போன்ற அதிகப்படியான குளிர்ந்த சீதோசன நிலை கொண்ட ஒரு நாட்டிலும் வேகமாக பரவுகிறது,
அதே வழியில் அது மிக அதிகமான வெப்பம் கொண்ட பாலைவன பகுதிகளிலும் பரவுகிறது.
இந்த கரோனா வைரஸ் இயற்கையாக தோன்றியிருக்குமேயானால், அது குளிர்ந்த இடங்களில் பரவியும், வெப்பமான இடங்களில் இறந்தும் இருக்கும்.
விலங்குகள் மற்றும் வைரஸ்கள் குறித்து கடந்த 40 வருட காலமாக தொடர்ந்து ஆராய்ச்சி செய்துள்ளேன்.
இது இயற்கையானது அல்ல. இது முற்றிலும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட வைரஸ்.
நான் சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்.
அந்த ஆய்வகத்தின் அனைத்து வல்லுனர்களையும், ஊழியர்களையும் நான் முழுமையாக அறிவேன். கொரோனா விபத்துக்குப் பிறகு அவர்கள் அனைவருக்கும் நான் போன் செய்து வருகிறேன்.
ஆனால், அவர்களின் தொலைபேசிகள் அனைத்தும் கடந்த 3 மாதங்களாக செயலிழந்து விட்டன.
எனவே இந்த ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

எனது மருத்துவ அறிவு மற்றும் நீண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில், கொரோனா இயற்கையானது அல்ல என்பதை 100% நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.
இது வெளவால்களிலிருந்து வரவில்லை.
சீனா இதை செயற்கையாக தயாரித்துள்ளது.
இன்று நான் சொல்வது பொய்யானது என இப்பொழுதோ அல்லது எனது மரணத்திற்குப் பிறகோ நிரூபிக்கப்பட்டால், அரசாங்கம் எனது நோபல் பரிசை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் சீனா பொய் சொல்கிறது,
இந்த உண்மை ஒரு நாள் அனைவருக்கும் வெளிப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்