Fri. Apr 19th, 2024

சந்நிதியான் ஆச்சிரமத்தின் முன்மாதிரியான செயற்பாடு

சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல்வேறு செயற்றிட்டங்களுக்கு 290,000 ரூபா நிதி உதவி நேற்று புதன்கிழமை வழங்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டம் – செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலை கட்டிட பணிக்காக 100,000 நிதி உதவி வழங்கப்பட்டன.
மூன்று கட்டங்களாக 150,000 ரூபா நிதி வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை – மூதூர் வெருகல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தி/மூ/வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்திற்கு அருள்மிகு சரஸ்வதி ஆலயம் அமைப்பதற்காக இரண்டாம் கட்டமாக 100,000 ரூபா நிதி பாடசாலை முதல்வரிடம் வழங்கப்பட்டன.

1 ம் கட்ட நிதி உதவியாக 100,000 ரூபா வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மாங்குளம் – பனிக்கன்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள பெண்தலைமைத்துவ குடும்பத்திற்கு வீடு கட்டுமானத்திற்காக 75,000 ரூபா நிதி வழங்கப்பட்டது.
2 கட்டங்களாக 125,000 ரூபா வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி – பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கின்ற விசேட தேவைப்பாடுடைய குடும்பத்திற்கு 2ம் கட்டமாக சமையலறை கட்டுமானத்திற்காக 15,000 ரூபா வழங்கப்பட்டது.

1ம் கட்டமாக 50, 000 ரூபா வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவ் செயற்றிட்ட உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்ததுடன் இவ் உதவித்திட்ட நிகழ்வுகளில் ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்