சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பொலீஸாருடன் இணைந்து இராணுவத்தினர் செயற்படுவர்
வடமராட்சி பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த பொலீஸாருடன் இணைந்து செயற்படுவதாக யாழ் இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்க தெரிவித்துள்ளார்.
வடமராட்சி உடுப்பிட்டி கரணவாய் பகுதியில் பெண் தலைமைத்துவத்தை கொண்டியங்கும் குடும்மத்திற்கு வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் விருந்தினராக கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு, கசிப்பு உற்பத்தி, கஞ்சா போன்ற செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தந்த பொலீஸ் நிலையங்கள் செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் பொலீஸார் உதவி கேட்கும் போது தொடர்ந்து உதவி புரிவதுடன், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு எம்மாலான செயற்பாடுகளையும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.