கோல் மழை பொழிந்து மனோகரா அடுத்த சுற்குக்கு முன்னேற்றம்
கற்கோவளம் உதயதாரகை விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரில் கோல் மழை பொழிந்து அடுத்த சுற்குக்கு முன்னேற்றியது அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழகம்.
நேற்று குறித்த கழக மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அல்வாய் மனோகரா அணியை எதிர்த்து கம்பர்மலை யங்கமன்ஸ் பி அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய அல்வாய் மனோகரா அணி 10:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்குக்கு முன்னேற்றியது.
அவ்வணி சார்பில் விதுசன், சகிஸ்ணன், தனுசுயன் ஆகியோர் தலா இவ்விரு கோல்களையும், கோகுலன், சுயாந்,சர்மிளன், விஸ்ணுதரன் ஆகியோர் ஒவ்வொரு கோல்களைப் பதிவு செய்யதனர். இப்போட்டியின் ஆட்ட நாயகனாக அல்வாய் மனோகரா அணியை பிரதிநிதித்துவம் செய்த தனுசுயன் தெரிவு செய்யப்பட்டார்.