Thu. Apr 25th, 2024

கோப்பாய் விபத்தில் குடும்பஸ்த்தர் பலி

கோப்பாய் இராச வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் இராசவீதி கோப்பாய் பகுதியைச் சேர்ந்த பெரியதம்பி கணேசலிங்கம் (வயது 57) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நல்லை கந்தன் ரில்லேர்ஸ் நடத்துபவர் எனத் தெரியவந்துள்ளது.

கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள ஆலயம் ஒன்றுக்குச் சென்றுவிட்டு கோப்பாய் பக்கம் நோக்கிய திசையில் பயணித்துக்கொண்டிருந்தபோது எதிரே வந்துகொண்டிருந்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான வாகனம் திடீரென திருப்ப முற்பட்டு முச்சக்கரவண்டியை மதிலோடு சேர்த்து மோதியதாக சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கோப்பாய் பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்