கைதடியில் விபத்து பொலீஸ் உத்தியோகத்தர் பலி
தென்மராட்சி கைதடி பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற விபத்தில் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது.
சம்பவத்தில் கொடிகாமம் பொலீஸ் பிரிவில் கடமையாற்றும் உதவிப் பொலீஸ் அத்தியட்சகரான குருநாகல் வரக்காபொல பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.குணவர்தன (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பேரூந்துடன் பின்பக்க மோதுண்டு வீதியில் விழுந்த போது எதிரே வந்த பட்டா வாகனத்தில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.