Thu. Mar 28th, 2024

கைகலப்பில் இரு பிள்ளைகளின் தந்தை கோடாரி வெட்டுக்கு இலக்கு

கலைமதி விளையாட்டு கழக மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற கைகலப்பில் இரு பிள்ளைகளின் தந்தை கைக் கோடாரியால் வெட்டப்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது.
சம்பவத்தில் கொற்வத்தையைச் சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது 35) இருபிள்ளைகளின் தந்தையே இவ்வாறு வெட்டுக் காயங்களுக்கு இலக்காகிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு நவிண்டில் கலைமதி பகுதியில் ஆலய திருவிழா நடைபெற்றது. இதில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏற்பட்ட கைகலப்பில் கைக்கோடாரியால் தாகாகப்பட்டதாகவும் குறித்த நபருக்கு 25 தையல் போடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. குறித்த கலவரத்தை அடக்க வேண்டிய வல்வெட்டித்துறை பொலிஸார் கைகலப்பு ஏற்பட்ட போது அங்கிருந்து அகன்று சென்றதாகவும்,  அத்துடன் இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்