குத்துச்சண்டையில் சுரந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய மாணவி பிளசிகாவுக்கு வெள்ளி பதக்கம்
அகில இலங்கை பாடசாலைகள் குத்துச் சண்டை போட்டியில் வ/சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த பிளசிகா வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட குண்துச்சண்டை போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் 18 வயதுப் பிரிவினருக்கான 51-58kg போட்டியில் பெண்கள் பிரிவில் வவுனியா வடக்கு கல்வி வலய சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தை பிரதிநிதித்துவம் செய்த பிளசிகா வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார்.