Fri. Mar 29th, 2024

குடத்தனையில் சற்று முன்னர் விபத்து ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு குடத்தனைச் சந்தி பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,
ஒரு பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அம்மன் பகுதியிலிருந்து மணல் மணலை ஏற்றிக் கொண்டு பருத்தித்துறை  நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பார ஊர்தியும்,  பருத்தித்துறை பகுதியிலிருந்து மருதங்கேணி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
 இதில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலியானவர் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியை சேர்ந்த கணேசன் என தெரிவிக்கப்பட்டதோடு, அவருடன் பயணம் செய்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான  விசாரணைகளை பருத்தித்துறை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்