Tue. Apr 16th, 2024

கிரிக்கெட்டில் சாவகச்சேரி பிரதேச செயலக அணி சம்பியன்

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான ஆண்களுக்கான கிரிகெட் போட்டியில் சாவகச்சேரி பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டம் இன்று அரியாலை சரஸ்வதி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் சாவகச்சேரி பிரதேச செயலக அணியை எதிர்த்து நல்லூர் பிரதேச செயலக அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நல்லூர் பிரதேச செயலக அணி நிர்ணயிக்கப்பட்ட 10 பந்துப் பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றனர்.
அவ்வணி சார்பில் அதிகபட்சமாக சுரேந்திரன் 18, சரண்ராஜ் 7 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.  பந்து வீச்சில் சாவகச்சேரி பிரதேச செயலக அணி சார்பில் அருண் 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சாவகச்சேரி பிரதேச செயலக அணி நிர்ணயிக்கப்பட்ட 10 பந்துப் பரிமாற்றங்களில் 5 இலக்குகளை இழந்து 71 ஓட்டங்களைப் பெற்று 5 இலக்குகளால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். அவ்வணி சார்பில் லதுசன் ஆட்டம் இழக்காமல் 28 ஓட்டங்களையும், கோபி 12 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் நல்லூர் பிரதேச செயலக அணி சார்பில் சத்தியன் 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்