Fri. Mar 29th, 2024

கிராம அலுவலகமான இடமாற்றங்கள்

கரவெட்டி பிரதேச செயலத்திற்குட்பட்ட கிராம அலுவலர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அரசின் 60 வயதின் பின் கட்டாய ஓய்வு சுற்றறிக்கைக்கு அமைவாக கரவெட்டி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் தலைமை கிராம அலுவலகர் உட்பட மூன்று கிராம அலுவலர்கள் ஓய்வு பெறவுள்ளனர். அத்துடன் கடந்த 30ம் திகதி கிராம அலுவலகர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.  இதனால் குறித்த இடங்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு கிராம அலுவலர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் துன்னாலை மத்தி ஜெ/373 கிராம அலுவலகர் திருமதி கி.பிரமிளா சமரபாகு ஜெ/357 கிராம அலுவலர் பிரிவிற்கும்,
துன்னாலை கிழக்கு ஜெ/371 கிராம அலுவலர் ஆர்.கிரிசாந்தன், துன்னாலை மத்தி ஜெ/373 கிராம அலுவலர் பிரிவிற்கு பதில் கடமை கிராம அலுவலகராகவும்,
துன்னாலை ஜெ/372 ஜெ.சூர்யா, கரணவாய் ஜெ/350 கிராம அலுவலர் பிரிவிற்கும்,
கரணவாய் கிழக்கு ஜெ/351 கிராம அலுவலகர் கிராம.கிருஸ்ணமேனன், துன்னாலை ஜெ/372 கிராம அலுவலகர் பிரிவிற்கும்,
கரணவாய் வடமேற்கு ஜெ/361 கிராம அலுவலகர் திருமதி எல்.தனுஜா, கரணவாய் கிழக்கு ஜெ/351 கிராம அலுவலர் பிரிவிற்கும்,
கப்புதூ ஜெ/382 கிராம அலுவலகர் எஸ்.அசோகன், கரணவாய் வடமேற்கு ஜெ/361 கிராம அலுவலர் பிரிவிற்கு பதில் கடமை அலுவலகராகவும்,
கரவெட்டி மத்தி ஜெ/367 கிராம அலுவலகர் திருமதி வை.சசிகாந்தன், கட்டைவேலி ஜெ/369 கிராம அலுவலர் பிரிவிற்கு பதில் கடமை அலுவலகராகவும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டு கடமையாற்றவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்