கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் இளைஞனின் சடலம் பருத்தித்துறையில்
பருத்தித்துறை பகுதியில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் இன்று காலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தும்பளையைச் சேர்ந்த சண்முகராசா துஸ்யந்தன் (வயது 21) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை 1ம் கட்டை பகுதியில் இயங்கும் மரக்காலையில் இருந்தே இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தந்தையின் மரக்காலையில் இரவில் பாதுகாப்பிற்காக இருந்த இளைஞரே அதிகலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.