Wed. Apr 24th, 2024

கற்கோவளம் பகுதியில் வாள் வெட்டு மூவர் வைத்தியசாலையில் மூவர் கைது

பருத்தித்துறை கற்கோவளம் புனித நகரில் நேற்று இரவிரவாக வாள்வெட்டு, மூவர் வைத்தியசாலையில் அனுமதி, மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதிரடிப் படையினர் வரவளைத்தே நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் பொலீஸாரும், அதிரடப்படையும் அப்பகுதியில் குவிக்கப்பட்டு தொடர்ந்தும் அச்சநிலை காணப்படுகிறது.
நேற்று பிற்பகல் இரண்டு மணியிலிருந்து இரவிராவாக வாள்வெட்டுக் குழுக்களால் பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் இடம் பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் மூவர் வெட்டுக் காயங்களுக்குள்ளாகி பருத்தித்துறை ஆதார
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளதுடன் மூவர் பருத்தித்துறை பொலீஸாரால் கைது செய்துள்ளனர். அத்துடன்  ஐந்து வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.பல இலட்சம் பெறுமதியான சொத்துக்களும் நாசம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது நேற்று பிற்பகல் கற்கோவளம் புனிதநகர் பகுதியில் போதையில் ஒருசிலர் சண்டித்தனத்தில் ஈடுபட்தாகவும் இதனால் அப்பகுதியில் உள்ள ஒருசிலர் குறித்த நபர்களை தமது வீட்டிற்கு முன்னால் நின்று சத்தம் போட வேண்டாம் என்று தெரிவித்ததை அடுத்து குறித்த நபர்கள் பிற இடங்களில் இருந்தும் அவ்வூரிலிருந்தும் வாள் வெட்டு குழுக்களை அழைத்து வீடுகள் கதவுகள், கார்கள்  உந்துருளிகள் உட்பட ஐந்து வீடுகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.இதுவரை பருத்தித்துறை போலீசாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர், தொடரந்தும்  பருத்தித்துறை போலீசார் பாதுகாப்பு கடமையில் அப்பகுதியில் உள்ளனர். நேற்றைய தினம் இராணுவம், சிறப்பு அதிரடி படை குவிக்கப்ட்டே வாள் வெட்டு குழுக்கள் அடக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேள் தமது கிராமத்தில் கஞ்சா கள்ளமண், கசிப்பு உட்பட்ட சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கே இவ்வாறு வாள் வெட்டிலும் சண்டித்தனத்திலும் ஈடிபடுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்நேற்றைய தினம் வாள் வெட்டுக் குழுக்கள் வந்தபோது தாம் ஓடி ஒழித்துள்ள நிலையிலேயே தம்மை காப்பாற்றி கொண்தாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்