கரவெட்டி அஞ்சல் அலுவலகத்தில் தேக்கு மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
கரவெட்டி அஞ்சல் அலுவலகத்தில் வளர்ந்திருந்த தேக்கு மரம் நேற்று வீசிய கடும் காற்றில் முறிந்து வீழ்ந்துள்ளது.
இதில் மின்சார கம்பத்தின் மேல் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், அதன் சுற்றுமதிலும் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை மின்சார சபைக்கு குறித்த அலுவலக உத்தியோகஸ்த்தர்களால் அறிவிக்கப்பட்ட போது, பல இடங்களில் இவ்வாறு அனர்த்தங்கள் ஏற்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதனால் மின்சாரத்தை மட்டும் துண்டித்து விடப்படும். துப்பரவாக்கும் பணிகளை நீங்களே பாரத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் கரவெட்டி அஞ்சல் அலுவலகத்தினரால் 25ஆயிரம் ரூபா கூலி வழங்கப்பட்டு துப்பரவாக்கும் பணி நடைபெற்று வருகின்றது.