கரவெட்டியில் முதலைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்துங்கள்
வடமராட்சி கரவெட்டி உச்சில் மாணிக்கவலை குளத்தில் முதலைகளின் ஆக்கிரமிப்பால் கால்நடைகள் பல இரையாகியுள்ளதுடன், மக்களும் பலர் அச்சத்துடன் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி கரவெட்டி உச்சில் மாணிக்கவலை குளத்தில் நேற்று முன்தினபுதன்கிழமை முதலைக்கு மாடு ஒன்று இரையாகியுள்ளது. இதுதொடர்பாக அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவிக்கையில்
சுமார் 5ற்கும் மேற்பட்ட முதலைகள் குளத்தை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. இவற்றினால் தொடர்ந்து கால் நடைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன கால் நடை வளர்ப்போரின் வாழ்வாதரமும் பாதிக்கபடுகின்றன. மேலும் மக்களும் குளத்தை அச்சத்துடனேயே பயன்படுத்தி வருகின்றனர்
ஆகவே கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மிக விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.