Tue. Apr 23rd, 2024

கரவெட்டியில் நடமாடும் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள்

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரிவில் விசேட நடமாடும் தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சித் திட்டம் நாளை (13) முதல் எதிர்வரும் 18ம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி செந்தூரன் அறிவித்துள்ளார்.
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு நடமாடும் சேவைகள் ஆரம்பிக்கபடவுள்ளன.
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெறாதவர்களினை இனங்காணும் முயற்சியாக எதிர்வரும் 13ம் திகதி திங்கட்கிழமை முதல் காலையும் மாலையுமாக 6 நாட்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட 12 இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இக்குறிப்பிட்ட இடங்களில் உள்ள வீடுகள் சுகாதாரத் துறை உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் தரிசிப்புச் செய்யப்பட்டு தடுப்பூசி ஏற்றிக் கொள்வதன் முக்கியத்துவம் எடுத்துக் கூறப்படும். விருப்பமுள்ள பொதுமக்கள் உடனடியாகவே தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஏற்பாடுகளும் செய்யப்படும்.
பொதுமக்கள் தயவு செய்து இச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுப் பயன் பெறுமாறு கேட்டுள்ளார்.  அத்துடன் எதிர்வரும் 21ம் திகதி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்