Fri. Mar 29th, 2024

கரவெட்டியில் இறந்தவருக்கு நெல்லியடி வைத்தியசாலை காரணமா? திடுக்கிடும் தகவல்

கரவெட்டி பகுதியில் ஒருவர் இறந்தமைக்கு நெல்லியடி தனியார் வைத்தியசாலை காரணமா? என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கரவெட்டி கிழக்கு கரவெட்டி யார்க்கரு பிள்ளையார் கோயிலடியைச் சேர்ந்த குலவீரசிங்கம் மனோன்மணி (வயது 60) என்பவர் இன்று புதன்கிழமை  உயிரிழந்துள்ளார்.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் வசிப்பவர் கடந்த மாதம்  சுகயீனம் காரணமாக நெல்லியடி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரை பரிசோதித்த வைத்தியர் வையிற்றில் கட்டி உள்ளதாகவும், அதனை சத்திரசிகிச்சை செய்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்து சத்திரசிகிச்சையும் நடைபெற்றது. அதன் பின்னர் சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு 10மணியளவில் உயிரிழந்துள்ளார்.  குறித்த நபரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்ட சட்டமருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.   அவரின் வயிற்றுப் பகுதியில் 50 சென்ரிமீற்ரர் நீளமும், 10 சென்ரி மீற்றர் அகலமும் உள்ள துணி ஒன்று தையலிடப்பட்டமை தெரியவந்துள்ளது. இதனால் சில வாரங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட சத்திர சிகிச்சை காரணமாக இருக்கலாமா என பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த நபரின் சடலம் உறவினர்களிடம் இன்று மதியம் ஒப்படைக்கப்பட்டு சடலத்தை தாக்கும்படி கூறப்பட்டதாகவும், அதன் பின்னர் நீதிபதி பார்வையிடும் வரை இறுதிக் கிரியையை தாமதமாக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சற்று முன்னர் நீதிபதி உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு சடலத்தை தாக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்