Fri. Mar 29th, 2024

கரணவாய் கிழக்கில் கொரோனாவால் மரணம்

கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கரணவாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய  பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் 5 நாட்களுக்கு முன்னர் அதிக சளி ஏற்பட்டதால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது சிகிச்சை பலனின்றி இன்று  உயிரிழந்துள்ளார்.  குறித்த பெண் இரு மகன்கள் வெளிநாடுகளில் உள்ளதுடன், பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும் அவர்  தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்