ஒழுங்குபடுத்தலில் ஏற்பட்ட குறைபாடே முரண்பாடுகளுக்கு காரணம் மக்கள் விசனம்
பருத்தித்துறை பிரதேச செயலாளர் மற்றும் பருத்தித்துறை பொலீஸாரின் ஒழுங்குபடுத்தலில் ஏற்பட்ட குறைபாடே எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு காரணம் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று புலோலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்பட்டது.
இதில் அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் பொது மக்கள் உட்பட பலருக்கும் முறையான ஒழுங்குபடுத்தலின்றி எரிபொருள் வழங்கப்பட்டது. இதனால் அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு இடையில் முரண்பாடுகள் மற்றும் பொதுமக்கள் வரிசையில் முரண்பாடுகள் என பல பிரச்சனைகளுக்கு பருத்தித்துறை பிரதேச செயலாளர் மற்றும் பருத்தித்துறை பொலீஸாரின் ஒழுங்குபடுத்தலில் ஏற்பட்ட குறைபாடே காரணம் எனவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.