எறிபந்தாட்ட பரீட்சையில் சித்தியடைந்தோர் விபரம்
இலங்கை பாடசாலைகள் எறிபந்தாட சங்கம் நடாத்திய சி தர நடுவர்களுக்கான பரீட்சையில் வடமாகாணத்தைச் சேர்ந்த 7 பேர் சித்தியடைந்துள்ளனர்.
உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆசிரியர் எஸ்.ஜெகப்பிரதாபன், புளியங்குளம் மகா வித்தியாலய பயிற்றுவிப்பாளர் எஸ்.தனுசியா, கோட்டைகட்டியகுளம் மகா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் வி.திவாகரன், கனகராயன்கும் மகா வித்யியாலய பயிற்றுவிப்பாளர் வி.ஐங்கரதாஸ், மன்னார் அடம்பன் மகா வித்தியாலய பயிற்றுவிப்பாளர் எஸ்.தரன், கொழும்பு இந்துக் கல்லூரி பயிற்றுவிப்பாளர்
ஈ.சாருஜன், இயக்கச்சி மகா வித்தியாலய பயிற்றுவிப்பாளர் கே.சசி ஆகியோர் சித்தி அடைந்துள்ளனர். இவர்களுடன் இலங்கை பாடசாலைகள் எறிபந்தாட்ட சங்க வடமாகாண இணைப்பாளர் நிற்பதையும் படத்தில் காணலாம்.