எரிபொருள் இன்மையால் பாடசாலை செல்ல முடியாத ஆசிரியர்களுக்கு விசேட விடுமுறை- ஜோசப் ஸ்டாலின்
நாளை திங்கட்கிழமை முதல் இரு வாரங்களுக்கு எரிபொருள் இன்மையால் பாடசாலை செல்ல முடியாத ஆசிரியர்களுக்கான லீவு விசேட லீவாக கருதப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் இன்மையால் பாடசாலைக்கு ஆசிரியர்கள் செல்ல முடியாதுள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடிய போது பாடசாலை செல்ல முடியாத ஆசிரியர்களுக்கு விசேட லீவாக கருதப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அரசு நகரப் புற பாடசாலை, கிராம புற பாடசாலை என இருவகையாக பிரித்துள்ளது. ஆனால் எந்தெந்த பாடசாலை என அறிவிக்கவில்லை. இதனால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதே செயற்பாடு மாணவர்களிடத்தேயும் உள்ளதேயும் உள்ளது. இது தொடர்பாக அரசு சரியான தீர்மானம் வெளியிடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.