Tue. Apr 23rd, 2024

ஊரணியில் இருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா

இன்று யாழ் மாவட்டத்தில் 10 பேர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்  ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று 404 பேருக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாழ் மாவட்டத்தில் 10 பேருக்கும்,  முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கும் என மொத்தமாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பருத்தித்துறை சுகாதார பிரிவில் வல்வெட்டித்துறை ஊறணி குடியேற்றத் திட்டத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கும்,  சண்டிலிப்பாய், தெல்லிப்பளை,  உடுவில் ஆகிய சுகாதார பிரிவில் தலா ஒவ்வொருவருக்கும்,  யாழ் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் ஒருவருக்கும் யாழ் சிறைச்சாலையில் 4 பேருக்கும், முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் இருவருக்கும் என 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்