Sat. Apr 20th, 2024

ஊரடங்கு தளர்வு, முண்டியடிக்கும் மக்கள்

24.03.2020 இன்று ஊர் அடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட  நிலையில் நெல்லியடி நகரப் பகுதியில்  பொதுமக்கள் கட்டுக்கடங்காத நிலை காணப்படுகின்றது. மரக்கறிகள் உற்சவ  விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. வெங்காயம் 350 ரூபா உருளைக்கிழங்கு 150 ரூபாயிலிருந்து 200 என்று கடைகளில் எல்லாம் கடும் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. சீனி  கோதுமை மா என்பன  கூடுதலான விலையில் தான் விற்பனை செய்கின்றார்கள். மக்கள் அலை மோதி பொருட்களைக் கொள்வனவு செய்கின்றார்கள். நெல்லியடி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளார்கள். விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. வாங்குவதற்கு எரிபொருள் நிலையங்களில் முண்டியடித்துக் கொண்டு இருக்கிறார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்