ஊரடங்கு உத்தரவு நேரத்தால் பெற்றோர், ஆசிரியர்கள் குழப்பத்தில்
நாளை ஊரடங்கு உத்தரவு தளர்வு மற்றும் ஊரடங்கு உத்தரவு அமுல் நேரங்களால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் குழப்ப நிலையை அடைந்துள்ளனர்.
நாளைய தினம் காலை 7 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் பணிபுரியும் ஆசிரியர்கள் எவ்வாறு கடமைக்குச் சென்று திரும்புவது என்றும் மாணவர்கள் தூர பாடசாலைகளுக்கு சென்று வீடு திரும்புவது தொடர்பாகவும் பாதுகாப்பு இன்மை எனவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எமது செய்தியாளர் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் பதிலளிக்கவில்லை.