உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி வெளியிட தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக செயன்முறை பரீட்சைகளில் தோற்றுவதற்கான திகதி பிற்போடபட்டமையால், பெறுபேறுகளை இறுதி செய்வது தாமதமாகியுள்ளது.
அடுத்த வாரமளவில் செயன்முறை பரீட்சைகள் நிறைவு செய்யப்பட்டு ஓகஸ்ட் மாதம் நிறைவடைவதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்படும் எனவும் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.