Fri. Apr 19th, 2024

உடுவில் மகளிர் கல்லூரியில் மரநடுகை நிகழ்வு

உடுவில் மகளிர் கல்லூரியின் 197 ஆவது அகவை தினத்தை முன்னிட்டும் அமெரிக்கா மிசனரிகளின் சேவையை நினைகூரும் வகையில் மரநடுகை நிகழ்வு நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி பற்றிசியா சுனித்தா யெபரட்ணம் அவர்களால் மரம் நாட்டப்பட்டது. உடுவில் மகளிர் கல்லூரி பெண்களுக்கு கல்வி அறிவு புகட்டிய வரலாற்று பாடசாலையாக இன்றும் மிளிர்ந்து வருகின்றது. இப் பாடசாலையின் வளாகத்தில் மிசனரிமாரினால் நாட்டப்பட்ட பாரம்பரிய மரங்கள் வரலாறாக உயர்ந்து நிற்கின்றன. இது அவர்களது இயற்கையை நேசிக்கும் சிந்தனையை காட்டியதுடன் மாணவர்கள் மத்தியில் மரம் நாட்டும் விருப்பத்தை தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்