Fri. Apr 19th, 2024

“இலவச கண்புரை சத்திர சிகிச்சை” இன்று சாவகச்சேரியில்

யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் கண்புரை (ஊயவயசயஉவ) சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் நன்கொடையாளர்களின் உதவியுடன் இலவசமாக கண்புரை சத்திரசிகிச்சையினை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நோயாளர்களைத் தெரிவுசெய்யும் முதலாவது கண்பரிசோதனை முகாம் நாளை 29.04.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
எனவே கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ள சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட நோயாளர்கள் மேற்படி கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுமாறு
யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்