இலங்கை செஞ்சிலுவை சங்க யாழ் கிளையின் முன்மாதிரியான செயற்பாடு
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளையின் அனுசரனையுடன் அங்கவீனர்கள் வருமானம் பெறக்கூடிய வகையில் ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டுள்ளது.
கரவெட்டி பிரிவிலுள்ள பசுமை சுய உதவிக்குழு மாற்றுத் திறனாளிகள் அமைப்பிற்கு பொருளாதார நெருக்கடியில் வாழும் அங்கவீனர்களுக்கான வருமானம் பெறக்கூடிய சுயதொழில் செயற்திட்டத்திற்காக 50 ஆயிரம் ரூபா காசோலை வழங்கப்பட்டது.
கரவெட்டி பிரிவினா தலைவர் சி.ரகுபரன், செயலாளர் த.பகிதரன் மற்றும் நிர்வாக அங்கத்தவர் வி.நாகேந்திரன் அக்கிராம உத்தியோகத்தர் ஆகியோரின் பங்களிப்புடன் தொழிலை மேற்கொள்ளுவதற்கு காசோலை வழங்கப்பட்டது.