இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில் வடமாகாணத்தில் மூவர் பதவியேற்பு
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன செயற்குழுவில் வட மாகாணத்திலிருந்து மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் தி. வரதராஜன் நிர்வாக பிரதி பொது செயலாளராகவும், யாழ் உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் ஆணோல்ட் இமானுவேல் அவர்கள் உபதலைவராகவும், வவுனியா உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் நாகராஜன் உதவிப் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்றது.
இதில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருக்கான தேர்வில் ஜஸ்வர் மற்றும் மணில் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ஜஸ்வர் 96 வாக்குகளைப் பெற்று மணிலை 6 வாக்குகளால் வென்று நடப்பாண்டுக்கான இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.